அவளது இரண்டங்குல முறுவலில்
ஏதோ ஓர் புள்ளியில் மடிந்து
மற்றொன்றில் உயிர்த்தெழுகிறேன்...
மரணமும் அவளாகிறாள்
ஜனனமும் அவளாகிறாள்
தினமும் ஒரு கைப்பிடி அள்ளிப்போட்டு
சேர்த்துக்கிடந்த காதலெல்லாம்
கனம் கொண்டது இதயத்துள்...
உணர்வுகளும் அவளாகிறாள்
உன்மத்தமும் அவளாகிறாள்
எண்ணிக்கையில் அடங்கும் நொடியளவில்
என்னைக் கடந்து செல்லும் நீளத்தில்
மட்டுமே அவளைக் காண்கிறேன்...
காலமும் அவளாகிறாள்
காத்திருப்பும் அவளாகிறாள்
நிலவைச் சுமக்கும் இரவுகளிலும்
பட்டாம்பூச்சி சிரிக்கும் பகல்களிலும்
நினைவுகளில் நித்தியமானவள்...
துடிப்பும் அவளாகிறாள்
உயிர்ப்பும் அவளாகிறாள்!!
No comments:
Post a Comment