பிறப்பிற்கும் இறப்பிற்கும்
இடைப்பட்ட சுவாசங்களில்
பெரும்பான்மையான வாசம் நீ!
நூறு பாஸ்கல் முத்தத்தால்
உன் இதழ்களின் ரேகைகளை
என் இதயத்தில் வடித்தவள் நீ!
என்னை மீறிய எனது பிடிவாதங்களை
உன் முன்னே மண்டியிட்டு
தலைகவிழச் செய்பவளும் நீ!
உன்னைக் காணும் நொடிகளில்
எனது வயிற்றினுள்
பட்டாம்பூச்சிகளை உயிர்த்தெழச் செய்தாய் நீ!
கையளவு கண்ணீரும்
கடலளவு புன்னகையும்
வாழ்வளவு காதலும் கொடுத்தவள் நீ!