Ad Text

Wednesday, 15 May 2019

என்றென்றும் நான் நீயாக...

மரக்கிளையில் தாவிடும் அணில் போல்
மனம் தத்தித்தாவிடும் உன்னால்
சிறைவைக்கும் சிரிப்பினைக் கண்டு
என் இதழும் சிரிக்கும் தன்னால்

முழு நிலவு உலவிடும் இரவில்
உலவிடுவோம் விரல்கள் கோர்த்து
மலர் வனத்தைப் போர்த்திடும் பனியில்
நனைந்திடுவோம் முத்தம் தீர்த்து

மழை மேகம் குடையாய்ப்போக
நதி நீரில் அலையாடிடுவோம்
சிறு குருவி கூட்டினை நெய்து
அதில் நிதமும் உறவாடிடுவோம்

அகல் விளக்கின் ஒளி நீயாக
முகம் தோன்றும் வெளி நீயாக
விழி நீரின் தெளி நீயாக
என்றென்றும் நான் நீயாக...

No comments:

Post a Comment