எனது பெயரை
உனது உள்ளங்கையில்
தினம் கிறுக்கும் உன் பேனா...
கோபத்தில் நரநரக்கும்
உன் பற்களின் பிடியினின்று
உயிர் பிழைக்கும் 'போடா'...
சாலையைக் கடக்கையில்
வெட்கத்தைப் புறந்தள்ளி
என் கைப்பற்றும் உன் விரல்கள்...
ஒரு முத்தம் கொடுத்ததற்கு
ஒரு வாரம் நீ அழுததும்
ஒரு மாதம் சண்டையிட்டதும்...
நான் அறிந்தும் அறியாமல்
ரகசியமாய் என்னை ரசிக்கும்
உனது கன்னி கள்ளத்தனம்...
முதல் முறை புடவை
எட்டுவைத்து என் முன்னே வர
உனது அரைமணி நேர தயக்கம்...
இதில் ஏதோவொன்று நினைவு வர,
நான் மரித்துவிட்டேன்
என்பதையும் மறந்து
சிரிக்கின்றேன், கல்லறையில்!!
No comments:
Post a Comment