Ad Text

Monday, 30 September 2019

பச்சை மண்ணு!!

"தம்பி, எழுந்திரு, நேரம் ஆகுதுல்ல…"
"இன்னைக்கு ஒரு நாள் லீவு போட்டுகிறேன் பா. ரொம்ப வயிறு வலிக்குது..."
சிரித்துக்கொண்ட தந்தைக்கு, நேற்று ஜுரம், அதற்கு முன்தினம் தலைவலி, என்று ஒவ்வொரு நாளும் அவன் கூறும் காரணங்களை எண்ணி வேடிக்கையாய் இருந்தது. ஒருவாறு அவனை கிளப்பியவர், சிணுங்கிக்கொண்டு வந்தவனை சமாதானம் செய்தபடியே உடன் அழைத்துச்சென்றார்.  முதல் நாள் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்த காலம் தொட்டு இன்று வரை இதே கூத்து தான். மாலை, மகனை எதிர்நோக்கி வாயிலில் நடை பழகிக்கொண்டிருந்தவரிடம் சென்று நின்றான், பேரன்.
"ஏன் தாத்தா, காலைல ஆபிசுக்கு போகமாட்டேன்னு அப்பா அழறதும், நீங்க சமாதானம் செஞ்சு கூட்டிட்டு போய் விடறதும், சாயங்காலம் அப்பா வரவரைக்கும் வாசல்லையே வெய்ட் பண்றதும்… ரொம்ப டூ மச் தாத்தா. நான் ஸ்கூலுக்கு ஒழுங்கா போய்ட்டு வரேன்'ல, இப்படித்தான் அடம்பிடிக்கறேனா?"
"அவன் உனக்கு அப்பனா இருந்தாலும் எனக்கு பிள்ளை தான். அதுவுமில்லாம, இந்தக் காலத்து பிள்ளைங்க மாதிரி அவன் கிடையாது.  சூது வாது தெரியாத பச்சை மண்ணு. மீசை வச்ச பச்சைக்குழந்தை!!"
"ஏன் தாத்தா அப்பா அப்படி இருக்காங்க?"
"ஏன்னா அவன் 90s கிட்!!"


No comments:

Post a Comment