Wednesday, 11 May 2016

உன் நேசம்

மலையின் உச்சியிலே
நின்றிருந்தேன்
என் தலை தொடும் முகிலைக்
கண்டிருந்தேன்
மழைத்துளியும் சிந்திடவே
தவமிருந்தேன்
வறண்ட பூமி குளிர்ந்திடவே
காத்திருந்தேன்
கருமேகம் எனைக் கடக்க
பயம்கொண்டேன்
அங்கோர் காட்டில் அது மழைத்தூவ
நான் மனம் நொந்தேன்
வறண்ட பூமி பிளந்திடவே
நான் உயிரோடு புதைந்தேன்!
தொலைதூர முகிலாய் நீ!
துவண்ட நிலமாய் நான்!
நான் ஏங்கிய மழைத்துளி,
உன் நேசம்!!!

No comments:

Post a Comment