Friday, 6 January 2017

காத்திருக்கிறேன்

தொலைவில் கேட்கும்
தபால்காரனின் சைக்கிள் ஒலி,
அவன் கொண்டு வரும் தபால் அனைத்தும்
எனக்கென்று தோன்றும்.
ஆனால்,
ஒன்று கூட எனக்கில்லை!

ஒரு நாளைக்கு ஒரு முறை
வந்து செல்லும் சீமை ரயில்,
இன்று நிச்சயம் நீ வருவாய்
என்று தோன்றும்.
ஆனால்,
இன்றும் நீ வரவில்லை!

அமைதியாய் தூங்கும்
என் வீட்டு தொலைபேசி,
கோவில்மணி ஓசை கூட தொலைபேசி அழைப்பு
என்று தோன்றும்.
ஆனால்,
மௌனத்தை போர்த்திஇருக்கும் தொலைபேசி!

திங்கள் ஒரு முறை உன்
ஊருக்கு வரும் என் தெரு அன்பர்கள்,
இந்த முறை உன் தூது வரும்
என்று தோன்றும்.
ஆனால்,
ஒரு சொல்கூட தூதில்லை!

No comments:

Post a Comment