Friday, 6 January 2017

ஞாபகம்

தென்றல் என்னை தொட்டுச் செல்லும் போது
உன் சுவாசம் என்னை தொட்ட ஞாபகம்!

முகிலுல் மறைந்து வெண்ணிலவு என்னை காணும் போது
உன் ஓரக்கண் கல்ல பார்வை ஞாபகம்!

சாலையோர செவ்வந்தி மரம் என் மீது பூ தெறிக்கும் போது
உன் முத்த மழையில் நனைந்த ஞாபகம்!

காலைக் கதிர் ஒளி என் மீது படியும் போது
உன் நிழல் ஏந்தி உன் பின்னே நடந்த ஞாபகம்!

No comments:

Post a Comment