Wednesday, 20 June 2018

கண்ணாமூச்சி...

உன் விழி வீசும் பார்வையில்
பல மொழி பேசிச் சென்றாய்
காற்றோடு உன் வாசம்
எனக்காகத் தந்தாய்
மனம் உன்னிடம் நிற்க
நான் விலகிச் சென்றேன்
சுழலென சூழ்ந்து
என்னை ஆட்கொண்டாய்

கனவோடு சில காலம்
காதலாய் சில நேரம்
உயிர் தீண்டும் உன் முகம்
உடல் தொடும் உன் மூச்சு
கண்ணீரோடு புன்னகை
தூரத்திலும் நெருக்கம்
உனக்கான என் மடி
எனக்கான உன் மார்பு

இருளில் தொலையும் பகலாய்
அனைத்தும் தொலைந்தது எங்கே...
உன் உள்ளங்கை தேடி
என் விரல்களும் அழுகுது இங்கே…

காலத்தின் கைபிடித்து நானும்
ஓடியோடி உனை தேடுகின்றேன்
காதலால் என் கண் கட்டிவிட்டு
எட்டி நின்று சிரிப்பதேனோ??!!

No comments:

Post a Comment