தொட்டு தொட்டுச் செல்லும்
தென்றலிடம் சொல்லவா...
அவளின் சின்னஞ்சிறு விரல்களுக்கே
என் தலை கோதும் உரிமை
எட்டி எட்டிப் பார்க்கும்
நிலவிடம் சொல்லவா...
எனது கண்மணியின் கண்களுக்கே
என்னை விழுங்கும் பார்வை
கூவிக் கூவி அழைக்கும்
குயிலிடம் சொல்லவா...
எனது பைங்கிளியின் இதழ்களுக்கே
என் பெயரின் பிறப்பு
சுற்றிச் சுற்றி வரும்
மரணத்திடம் சொல்லவா...
என்றோ அவளுள் புதைந்துவிட்டேன்
உனக்குக் கொடுக்க இல்லை!!
No comments:
Post a Comment