Ad Text

Tuesday, 19 June 2018

உன்னோடு உனதாய்!!

நான் நானாக
நீ நானாக
நாம் என்னுள்ளே
நானாகக் கண்டேன்!!

பிரியும் உடலிரண்டு
பிரியா உயிரிரண்டு
இவ்விரு உயிருள்
காதல் கசிந்தேன்!!

இன்பம் வெகுதூரம்
துன்பம் வெகுதூரம்
சலனமில்லா நிலையில்
நான் நிலைத்தேன்!!

கடிகார முள் ஓடியோடி
காலம் குறைந்தாலும்
கடிவாளம் பூட்டிய
ஜீவனோடு வாழ்ந்தேன்!!

மோனங்கள் சில நேரம்
மோகங்கள் சில நேரம்
உன்னோடு திரிந்து
நான் மரித்தேன்!!

காற்றில் தென்றலாய்
கனவில் காட்சியாய்
ஒலியில் மொழியாய்
உன்னோடு உனதாய்க் கலந்தேன்!!

No comments:

Post a Comment