உன் சுவாசத்தைக் கடன் வாங்கி
பூவிற்கு வாசம் தரவா?!
உன் பெயரைப் பாடிடவே
கருங்குயிலுக்கு ஆணையிடவா?!
மேகக் கூட்டத்தை அழைத்துவந்து
உன் பாதையில் படரவிடவா?!
விடியற் பனித்துளியை சேகரித்து
உன் கூந்தல் பூவிற்கு பொழியவா?!
இரவில் உனக்கு ஒளி சேர்க்க
தாரகைத் தோரணம் கட்டவா?!
நின் சிரிப்புகள் ஒவ்வொன்றையும்
சிப்பியுள் பூட்டி முத்தெடுக்கவா?!
உன் நிலாமுகம் போதும்
சந்திரனுக்கு விடுமுறை கொடுக்கவா?!
உனது விழியோரம் நீர் கசிந்தால்
என் உயிரைக் கொண்டு துடைக்கவா?!
No comments:
Post a Comment