மழை… கொட்டும் மழைச்சரங்கள் முகம் நனைத்து உயிர் தீண்டும் நொடியில் அவளைக் கண்டேன். மழை நின்றும் அவள் நினைவு என் உயிரை நீவியது.
சாரலாய் அவளது பார்வைகள், தூரலாய் அவளது வார்த்தைகள், மழை மேகமாய்க் கொழுத்த எங்கள் காதல் என, மழை நீர் ஓடையில் தவழும் காகிதக் கப்பலாய் என் நாட்கள் தவழ்ந்து நகர்ந்தன.
காகிதக் கப்பல் ஓர் நாள் கவிழ, இன்றும் அவளை மழை நாட்களில் தொலைவிலிருந்து நான் ரசித்திருக்கிறேன், மழைநீரெல்லாம் எனது கண்ணீரால் கரிக்கச்செய்தபடி.
இன்று மழையில்லை ஆயினும் அவள் அதோ… அங்கே வருகிறாள்… என் கருப்புக்கண்ணாடி எனக்குக் கைக்கொடுக்க, அவளது கண்களையும் மறைத்துக்கொண்டிருந்தது ஓர் கருப்புக்கண்ணாடி.
சாரலாய் அவளது பார்வைகள், தூரலாய் அவளது வார்த்தைகள், மழை மேகமாய்க் கொழுத்த எங்கள் காதல் என, மழை நீர் ஓடையில் தவழும் காகிதக் கப்பலாய் என் நாட்கள் தவழ்ந்து நகர்ந்தன.
காகிதக் கப்பல் ஓர் நாள் கவிழ, இன்றும் அவளை மழை நாட்களில் தொலைவிலிருந்து நான் ரசித்திருக்கிறேன், மழைநீரெல்லாம் எனது கண்ணீரால் கரிக்கச்செய்தபடி.
இன்று மழையில்லை ஆயினும் அவள் அதோ… அங்கே வருகிறாள்… என் கருப்புக்கண்ணாடி எனக்குக் கைக்கொடுக்க, அவளது கண்களையும் மறைத்துக்கொண்டிருந்தது ஓர் கருப்புக்கண்ணாடி.
No comments:
Post a Comment