Thursday, 6 August 2020

சீரக மிட்டாய் - நெட்டையனும், குட்டையனும்





"ஏலே குட்டை, என்னை நம்பி எத்தனை சீவன் வாழுது தெரியுமாலே?!!"
"நெடு நெடுன்னு வளந்திருக்கியே தவிர விவரமில்லாத பய நீ. ஒதுங்க எடம் கொடுத்ததெல்லாம் பெருசில்லப்பு, நான் வயித்துக்கு உண்டி கொடுக்கேன். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் நெட்டையா..."
நெட்டையனும், குட்டையனும் தீவிரமாக தங்களின் அருமை பெருமைகளை என்றும் போல் அன்றும் விவாதித்துக்கொண்டிருக்க, ‘இவிங்களுக்கு வேற வேலையில்ல’ என்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டு அவர்களின் நண்பர்கள் சூழ்ந்திருக்க, கட கடவென பெருஞ்சப்தத்துடன் வந்த அந்த ராட்சச வண்டியின் இயந்திரக் கைகள், நெட்டையனையும், குட்டையனையும், அவர்களின் மற்ற நண்பர்களையும் வேரோடு பிடுங்கி வீசியது.

No comments:

Post a Comment