"இந்தாமா, வாங்குன கடனுக்கு வட்டி கொடுக்காம நாலு மாசமா உன் புருசன் ஏமாத்திட்டு திரியறான். இந்தக் கந்துவிட்டி கோவிந்தன் விவகாரமான ஆளு, காசு வரலனா இனியும் பேசிக்கிட்டு நிக்க மாட்டேன், அத்து போட்டு போய்கிட்டே இருப்பேன்."
ஜன்னல் வழியே பதில் கூறுபவள், இன்று அவன் பேசியவற்றைக் கேட்டு ஈரக்கொலை நடுங்க அவன் காலடியில் வந்து விழுந்தாள்.
"அய்யா, எம்புருசன ஒன்னு செஞ்சுடாத சாமி, இந்தத் தாலிய வேணும்னா வச்சுக்க" என்று அவளிடம் எச்சம் இருந்த அரை பவுன் தங்கத்தாலியை நீட்டினாள், நிறைமாத வயிருடன், மண்டியிட்டபடி.
எதுவும் கூறாமல் வண்டியைக் கிளப்பியவன், கொன்னிமலைக்கோவிலில் பிள்ளை வேண்டி அவனது மனைவி ஏற்பாடு செய்திருந்த சிறப்புப் பூஜைக்கு வந்து சேர்ந்தான்.
No comments:
Post a Comment