Tuesday, 4 August 2020

சீரக மிட்டாய் - செவப்பியும், மஞ்சத்தாயும்




"அடியே செவப்பி, சீலைக்கு தோதா கையில நம்மள மாட்டிக்கிட்டு ஒய்யாரியா திரிவாளே அந்த அழகி எங்க பத்து நாளா காணல?"

"அதுதான் எனக்கும் தெரியல மஞ்சத்தாயி..."

இவர்கள் பேசிக்கொண்டிருக்க, பெட்டி திறக்கப்பட்டு மஞ்சள் மற்றும் சிகப்புக் கண்ணாடி வளையல்கள் மட்டும் வெளியேற்றப்பட்டன. அழகியின் கைகளில் அடுக்கப்பட்ட வளையல்கள் ஒருவரையொருவர் கண்டு சிரித்துக்கொண்டிருக்க, அடுத்த நொடியே ஒன்றோடொன்று படார் படாரென மோதப்பட்டு, உடைந்து சிதரின. ரத்தம் வடிய செவப்பியும், மஞ்சத்தாயும் கிடக்க, அழகியின் குங்குமம் அழிக்கப்பட்டு, கூந்தலில் சூடிய மல்லிகை பிய்க்கப்பட்டது.

No comments:

Post a Comment