Sunday, 2 August 2020

சீரக மிட்டாய் - சமாதான முத்தம்

 



அவளது அழுகை விசும்பலாகியும் கட்டில் மீதிருந்து எழாமல் கிடக்கிறாள். அவளது தேவையெல்லாம் நெற்றியில் ஓர் முத்தம் - சமாதான முத்தம். "எழுந்து வா, சாப்பிட" - காதில் விழுகிறது, ஆனால் ஒற்றை முத்தம் வேண்டி தவம் கிடக்கிறாள். "அடியே, புள்ளைங்களுக்கு பாடம் சொல்லித் தர வாத்தியாரா இருந்துகிட்டு, ஒரு வார்த்தை சொல்லிட்டேன்னு ஒரு மணி நேரமா அழுதுகிட்டு இருக்கியே?!!" என்று கூறிக்கொண்டே அவளருகே வந்த அவளது தாய், அவளது முன் நெற்றியில் விழுந்திருந்த கேசத்தை ஒதுக்கி முத்தம் வைத்து, முகத்தை அழுந்தத் துடைத்துவிட்டாள். விசும்பல் தொலைந்து பற்கள் மின்ன சிரித்தவள், "நான் கிழவியானாலும் உனக்கு எப்பவும் குழந்தை தான்" என்றுவிட்டு தாயை இழுத்து அருகே அமரச் செய்தவள், அன்னை மடி மீது தலைவைத்து படுத்துக்கொண்டாள்.

No comments:

Post a Comment