அந்தக் குப்பத்தின் அருகாமையில் நீண்டிருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் யாரோ அடிபட்டு இறந்து போன செய்தி அறிந்து ஒப்பாரி பாட்டெடுக்க வந்துவிட்டாள், கூன் விழுந்து, பார்வை மங்கி, பற்கள் தொலைத்த எண்பத்தி மூன்று வயதான, ஒப்பாரிக் கிழவி.
"ஏ கிழவி, ஏதாவது எழவு வீட்ல பாடுனா நாலு காசு கிடைக்கும். வேவாத வெயில்ல இங்க ஏன் தொண்ட தண்ணி வத்த பாடிக்கிடக்கற?"
"எந்த உறவும் இல்லாம அம்பது வருசமா அனாதையா கிடக்கறவளுக்கு தான் இன்னொரு உசுரோட மதிப்பு தெரியும். என் கண்ணு முன்னாடி எந்த உசுரு போனாலும் என் சொந்தமா நெனச்சு அந்த சீவனுக்காக நாலு சொட்டு கண்ணீர சிந்தி, ஒப்பாரி வைப்பேன்…"
வானம் கருத்திருக்கு...
வட்டநிலா வாடிருக்கு...
எட்டருந்து பாடுறேனே...
ராசா நீ எங்க போன???
No comments:
Post a Comment