Monday, 3 December 2018

என்னை அறிவாயோ??!

தூரத்து நிலவு கூட மனமிரங்கி
தரை சேர்ந்து என்னோடு துணை நடக்கும்
துப்பட்டா புது மலரே நீ மட்டும்
காத்திருக்கும் எனை கடந்து போவதென்ன?

தினம் நடக்கும் ஓராயிரம் ஒத்திகை
கண்ணாடியும் கை நீண்டு எனை அணைக்கும்
கருணை இல்லா பெண் பூவே நீ
கண்கொண்டு எனை பார்த்தால் என்ன?

வணக்கங்களோடு வாழ்த்துக்களும் கூறி
தினமும் குறுஞ்செய்தியில் உனை துரத்த
பன்னீர்ப்பூ விரல் கொண்டு நீயும்
ஒரு 'மின்'நகை பகிர்ந்தால் என்ன?

நேற்று கடலோரம் காதல் நட்டவர்
இன்று மணமுடித்து தொட்டில் ஆட்டுகிறார்
ஆண்டுகள் ஆறு ஓடியும் நீ
என் பெயராவது அறிந்துகொண்டால் என்ன?

No comments:

Post a Comment