முட்களோடு சொற்கள் செய்து
காயம் தந்தாய் - எனது
கண்ணீரும் சிகப்பாய் மாறி
சிறகு கிழிந்ததே!
தென்றல் எந்தன் வாசல் வர
காத்து நிற்கிறேன் - இன்றோ
புயல் வீசி என் கூடு சிதைய
பார்த்திருக்கிறேன்!!
மருகி மருகி எந்தன் உள்ளம்
குழந்தை ஆனதே - நீயும்
விலகிச் சென்ற நொடியை எண்ணி
அழுது கரையுதே!!
பகலெல்லாம் காத்திருக்கும்
மல்லி அல்லியும் - இரவில்
சந்திரனைக் கண்ட பின்னே
மெல்ல அவிழுமே!
காலமெல்லாம் காத்திருப்பேன்
காதல் சேமித்து - நீயும்
காதல் சொல்ல தவம் கிடப்பேன்
எனது உயிர் காத்து!!
மனம் இரங்கி விழிகளாலே
காதல் சொல்லிடு - இல்லை,
மரித்த பின்னே கல்லறைக்கு
முத்தம் தந்திடு!!
காயம் தந்தாய் - எனது
கண்ணீரும் சிகப்பாய் மாறி
சிறகு கிழிந்ததே!
தென்றல் எந்தன் வாசல் வர
காத்து நிற்கிறேன் - இன்றோ
புயல் வீசி என் கூடு சிதைய
பார்த்திருக்கிறேன்!!
மருகி மருகி எந்தன் உள்ளம்
குழந்தை ஆனதே - நீயும்
விலகிச் சென்ற நொடியை எண்ணி
அழுது கரையுதே!!
பகலெல்லாம் காத்திருக்கும்
மல்லி அல்லியும் - இரவில்
சந்திரனைக் கண்ட பின்னே
மெல்ல அவிழுமே!
காலமெல்லாம் காத்திருப்பேன்
காதல் சேமித்து - நீயும்
காதல் சொல்ல தவம் கிடப்பேன்
எனது உயிர் காத்து!!
மனம் இரங்கி விழிகளாலே
காதல் சொல்லிடு - இல்லை,
மரித்த பின்னே கல்லறைக்கு
முத்தம் தந்திடு!!
No comments:
Post a Comment