Saturday, 1 December 2018

நீ வா...

சித்திரை மேகங்களின்
சர்க்கரை நீர் பந்தலில்
சித்திரமே என் கைக்கோர்த்து
சித்தம் நனைந்திட வா!

சொப்பன விண்வெளியில்
சொர்கத்து பொன் விரிப்பில்
அற்புதமே என் தோள் சாய்ந்து
அமைதியைத் தந்திட வா!

பட்டாசு மொழிகளோடு
மத்தாப்பு மென்னகை சேர்த்து
கற்பகமே என் விழி பார்த்து
கவிதைகள் இயம்பிட வா!

நட்சத்திர மாலையிட்டு
நெற்றியில் தேன்முத்தம் பதித்து
உத்தமமே என் மனம் நிறைந்து
உயிரில் நீரூற்ற வா!!

No comments:

Post a Comment