மழைக்குருவி நீ மனதுள் சிலிர்க்க
சிறகு தெறிக்கும் சாரல் எனை நனைத்ததடி
சித்து விளையாட்டு உன் விழிகள் படைக்க
சுற்றும் பூமியும் ஸ்தம்பித்து நிற்குதடி
கார்த்திகைக் குளிரே நீ வருடிச் செல்ல
சருகும் இங்கே வண்ண சிறகானதடி
மோகனக் கொலுசுகள் மந்திரம் தூவ
கட்டுண்டு மனம் உன் பின்னே செல்லுதடி
உன்தன் நந்தவனத்தில் வாழ்ந்திடவே
என் வீட்டு ரோஜாக்கள் மதில் தாண்டுதடி
தாவணி வாசம் என் சுவாசம் சேர
அணுக்களிலெல்லாம் காதல் வழியுதடி
உதடு தெறித்த வார்த்தைகள் எல்லாம்
இதய குடுவைக்குள் உயிரோடு வாழுதடி
மகுடி கண்ட பாம்பினைப் போலே
உன் அசைவிற்கு என் உயிர் இசைக்குதடி!!
No comments:
Post a Comment