"நீ என்னா சொன்னாலும் சாமியுமில்ல, பூதமுமில்ல…" என்று ஆணித்தனமாகக் கூறினார் அந்த நாத்திகவாதி.
"உன்னை இப்படி யோசிக்க வைக்கிறதும், பேச வைக்கிறதும் சாமி தான்…" என்று சிரித்து வைத்தார் ஆத்திகவாதி.
"அடபோப்பா… எல்லாத்துக்கும் அறிவியல் விளக்கம் இருக்கற மாதிரி, சாமினு ஒன்னு இருக்கறத அறிவியல் பூர்வமா நிரூபிச்சாத்தான் ஏத்துப்பேனே ஒழிய, இவனுக்கு சாமி இதை பன்னிச்சு, அவனுக்கு அதை பன்னிச்சுன்னு சொன்னா நான் நம்பத் தயாரா இல்லை."
வேகமாய்ப் பாய்ந்து ஒரு மோட்டார் வண்டி வந்துகொண்டிருக்க, அதை கவனிக்காது செல்ல முற்பட்ட ஆத்திகனின் கையைப் பிடித்து இழுத்து நிறுத்திய நாத்திகன், "யோவ், வண்டி வரது கூட தெரியாம இப்படி நடக்கிறியே, நான் மட்டும் புடிச்சு தடுக்கலேனா நீ சொர்கத்துல இருக்கற உன் சாமிக்கிட்ட போய் சேர்ந்திருப்ப…"
அவரைக் கண்டு சிரித்த ஆத்திகன், "யோவ், நான் தான் சொன்னேன்ல சாமி இருக்கு, அது எல்லா நேரத்துலயும் காப்பாத்தும்னு…"
No comments:
Post a Comment