Sunday, 26 July 2020

சீரக மிட்டாய் - பரிசம்




"ஏலே பாண்டி, உன் அக்கா மவ, என் அழகு ராசாத்தி, இந்த வீட்டு மகராசி செண்பகம் வயசுக்கு வந்துட்டாளாம்…" என்று தாயாரின் குரலைக் கேட்டதும் வயக்காட்டில் வேலையாய் இருந்தவன், போட்டது போட்டபடி விட்டுவிட்டு பரிசம் போட வரிசைக் கட்டிக்கொண்டு, அக்கா வீட்டிற்கு சொந்த பந்தங்களோடு கிளம்பிச் சென்றான்.

முறை மாமன் தான் என்ற போதும், ஒரு முறை கூட ஏறெடுத்தும் பார்க்காதவள், ஓர் வார்த்தை கூட பேசாதவள் மீது, ஏனோ அவனுக்குக் கிறுக்கு!!

"ஏலே மாப்ள, தை பொறந்து கல்யாணத்தை வச்சுகவமா?" என்றார், செண்பகத்தின் தந்தை.

"இந்தா மாமா, உனக்கு மட்டுமில்ல இந்த ஊர் சனத்துக்கும் சொல்லிக்கறேன், ஊர் பழக்கம் வழக்கம்னு சொல்லிக்கிட்டு எவனும் கல்யாணப் பேச்சு எடுக்கக்கூடாது. செண்பகம் என்னென்ன படிக்கணும்னு ஆசைபடுதோ, அத்தனையும் படிச்ச பிறகு தான் எல்லாம்…" என்றவன், மிரட்டும் தோரணையில் அரிவாளை நடுக்கூடத்தில் வீசியெறிந்துவிட்டு அவளை நோக்க, முதன் முறை தலை நிமிர்த்தி மாமனைக் கண்டு சிரித்தாள், செண்பகம்.

No comments:

Post a Comment