Monday, 27 July 2020

சீரக மிட்டாய் - பூமராங்




"சார், ரெண்டு நாள் என்னோட ஓவியங்களை உங்க கேலரில பார்வைக்கு வைக்க வாய்ப்பு கிடைச்சா, என் வாழ்க்கையே தல கீழ மாறிடும்… ப்ளீஸ்…"

மன்றாடுபவன் மீது இரக்கப்பட்டு, அந்த அரங்கத்தின் தலைமை நிர்வாகியிடம் அழைத்துச்சென்ற அரங்கத்தின் மேலாளர், "உங்களுக்கு ரெண்டு நிமிஷம் தான் அப்பாய்ண்ட்மெண்ட்" என்றார்.

"வாக்கு கொடுத்துட்டேன்னு சொல்லி கண்ணு தெரியாத உன்னை என் தலையில வலுக்கட்டாயமா கட்டி வச்சா, வேற வழியில்லாம நான் அனுசரிச்சு குடும்பம் நடத்துவேன்னு  எங்கப்பா நினைச்சாரு. என் ஓவியங்கள ரசிக்கத் தெரியலனாலும் பரவால்ல, ஆனா பார்க்கக் கூட முடியாத நீ எனக்குத் தேவையில்லை. இன்னும் ரெண்டு நிமிஷத்துல இந்த விவகாரத்து பேப்பர்ல கையெழுத்து போட்டுட்டு, வீட்டை விட்டு போ" என்று பத்து வருடங்களுக்கு முன் அவளிடம் அவன் கூறியது, இன்று அவளை அரங்கத்தின் தலைமை நிர்வாகி இருக்கையில் கண்டதும் நினைவிற்கு வந்தது.

No comments:

Post a Comment