ஆர்.பி. நகர், குறுக்குத் தெருவில் தீயணைப்பு வீரர்கள் வரும் முன்னே, குடிசைகள் அனைத்தையும் முழுங்கிவிட்டு, தாண்டவமாடியது, கட்டுக்கடங்கா பெருந்தீ.
பொன்னாத்தாளின் கண் முன்னே அவளது குடிசை மெல்ல மெல்ல தீக்கிரையாகிக் கொண்டிருக்க, பட்டென அவள் கைப்பிடியை விடுத்து குடிசைக்குள் ஓடினான், அவளது ஒரே மகன், ராசய்யா.
துடிதுடித்துப்போனவள் குடிசையை நோக்கி ஓட, சுற்றம் அவளை தடுத்து நிறுத்தியது.
கடவுளென வந்த தீயணைப்புப் படை ரட்சகர்கள், நீர் பொழிந்து தீயினை அணைத்தனர்.
பொன்னாத்தாளின் குடிசைக்குள்ளே, ஒரு மூலையில் நனைந்தபடி ராசய்யா முடங்கியிருக்க, அவனது சின்னஞ்சிறு விரல்களில் அடைகாக்கப்பட்டிருந்தது, டைகர் நாய்க்குட்டி.
No comments:
Post a Comment