Thursday, 30 July 2020

சீரக மிட்டாய் - ராஜ தந்திரம்!!




"மன்னா… மன்னா… பக்கத்து நாட்டு மன்னர் நாளை நம் மீது போர் தொடுக்க உள்ளாராம். காலை எழுந்து காளிக்கு படைத்துவிட்டு, படைகளைத் திரட்டிக்கொண்டு இங்கு வரவுள்ளதாக ஒற்றன் செய்தி அனுப்பியுள்ளான்."
"பயம் வேண்டாம் அமைச்சரே, நமது ஊர் எல்லையில் மத்தியானந்தா என்றொரு சாமியார் உள்ளார், அவரை மட்டும் அழைத்து வாருங்கள். வெற்றி நமக்கே!!"
"மன்னா?"
"அடேய் அமைச்சா, அந்த சாமியார் கூறினால் காலையில் உதிக்க வேண்டிய சூரியன் மதியம் உதிப்பானாம். அதனாலேயே அவருடைய பெயர் மத்தியானந்தா. நாளை மதியம் அந்த அண்டை நாட்டு ஹல்க் ஹோகன் எழுந்து, பல் துலக்கி, பால் பாயாசம் நைவேத்தியம் செய்துவிட்டு, படைகளைத் திரட்டி வருவதற்குள் நாம் அவனின் கோட்டையை சுற்றி வளைத்து, அவனை சிறையெடுத்துவிடுவோம்."
"ஆஹா மன்னா, என்ன ஒரு ராஜ தந்திரம்!!"

No comments:

Post a Comment