Friday, 31 July 2020

சீரக மிட்டாய் - சட்டையும், சீலையும்

 



அழுதபடி உறங்கிப்போனவள் தூங்கி எழுகையில் மணி நான்கு என்று காட்டியது. அரக்கப்பரக்க முகம் கழுவி, சேலையை சரி செய்து, பள்ளியிலிருந்து பிள்ளைகளை அழைத்துவர அவள் அறைக் கதவைத் திறக்க, வெளியே இரண்டு பிள்ளைகளும் அப்பாவோடு கார்ட்டூன் பார்த்தபடி கேக்கயும், வெஜிடபிள் பப்சையும் முழுங்கிக்கொண்டிருந்தன. மெல்ல நகர்ந்து அடுக்களைக்குள் செல்ல, மேடையின் மேல் அவளுக்காகவே காத்திருந்தது மல்லிகையும், அல்வாவும். பின்னிருந்து அணைத்தவன், அவள் கழுத்து மடிப்பில் முத்தம் வைத்து, "இனிமே காலைல டென்ஷன்ல உன்னை கண்டபடி திட்டமாட்டேன்" என்றான். காலையில் நடந்த யுத்தத்தை மறந்து சிரித்தவள், "தெரியாம உங்க சட்டையோட என் சீலைய மெஷின்ல போட்டு சாயமேறிடுச்சு, இனி அப்படி நடக்காது " என்றாள்.

No comments:

Post a Comment