மனசு தடுமாறும்
இந்த உலகம் புதுசாகும்
விழியோ உன்னை தேடும்
உன் பெயரே எங்கும் கேட்கும்
தனிமை சுகமாகும்
தவிப்பே துணையாகும்
நிலவும் வந்து பேசும்
புது நாணம் நெஞ்சில் பூக்கும்
தொலைவில் வரும்போதே
என் உயிரும் தடுமாறும்
அருகில் உன்னை கண்டால்
என் மூச்சே நின்றுபோகும்
கண்ணாலே பார்த்து பார்த்து
மௌனமான நேசம்
கண்ணாடி நெஞ்சுக்குள்
பொக்கிஷமாய் வாழும்
சொல்லத்தானே வார்த்தையில்லை
சொல்லிடவும் தேவை இல்லை
உயிருக்குள்ள உறைந்துபோன
உன் நினைவே போதும்!!!
No comments:
Post a Comment