காற்று வெளியிலே
கண்மூடித் தவழ்ந்திடும்
காகிதப் பூ போலே,
கனவிலே தொலைகின்றேன்
சிந்தனைகள் ஒவ்வொன்றும்
சில்லுசில்லாய் சிதைந்திட
சித்தத்தில் நீ மட்டும்
சிலை போல நிற்கின்றாய்
கண்களுக்குள் தவறவிட்ட உன்
காட்சியைத் தேடுகின்றேன்
கண்ணாடிக் குடுவைக்குள்
காற்றைத் தேடி திரிகின்றேன்
அலைபோல பல எண்ணம்
தீண்டித் தீண்டி சென்றிடினும்
நினைவெல்லாம் உனைமட்டும்
சிப்பியுள் முத்தாய் அடைகாக்கும்
பிரிந்து விலகிச் சென்றாலும்
ஓடி ஒளிந்து மறைந்தாலும்
என் இதயக் கண்கள் என்றும்
உன்னை மட்டும் நாடிடுமே!!!
No comments:
Post a Comment