Ad Text

Sunday, 28 January 2018

விலகிய நொடி

என் விழி மீறி பிறக்கும்
பார்வையெல்லாம்
உன் முகம் தேடி காற்றிலே
விரைவதேனோ?!
என் இதழ் தாண்டி ஒலிக்கும்
வாக்கியங்கள்
உன் பெயரையே வார்த்தையாய்
நிறைத்ததேனோ?!
கடிகாரம் கடக்கின்ற
நாழிகைகள்
நான் மட்டும் கடக்காமல்
நிற்பதென்ன?
நீ விலகிச் சென்ற
அந்த நொடி
என்முன்னே நிழலாடி
உறைவதென்ன?
உருண்டோடும் உலகம்
எனை இழுத்துச்செல்லும்
அந்த நொடியினின்று நகராது
என் கால்கள் பாயும்
இரவு பகல், சிந்தை தப்பி
உலவுகின்றேன்!
விழி திறந்து, கனவுள்ளே
வாழுகின்றேன்!
காலம், இந்த உடலுக்குக்
கடிவாளம் போடும்!
காதல், இந்த பிரபஞ்சத்தில்
கலந்தே வாழும்!!

No comments:

Post a Comment