சிந்தித்து சிந்தித்து வியக்கின்றேன்
உன் சிற்பிக்கு நன்றி கூறிடுவேன்
உயிருள்ள அழகு சிலையே நீ
என் உயிரைப் பருகிட வந்தாயோ?!
நெருஞ்சி முட்களால் வேலி செய்தும்
நெஞ்சினைக் காக்க இயலவில்லை
கெஞ்சிக் கூத்தாடி மன்றாடியும்
நெஞ்சத்தின் பாய்ச்சலோ முடங்கவில்லை
போதி மரத்தின் புத்தனைப்போல்
வாழ்ந்திட மனதிற்குப் பாடம் சொன்னேன்
வேதிப் பொருட்கள் யாதுமின்றி
என் உயிருக்குள் அமிலத்தை ஊற்றிவிட்டாய்
என்னை மெல்ல மெல்ல சிதைப்பதுவே
அரக்கி உனக்கு ஆனந்தமோ!!
கொல்லும் வலியையும் பொறுத்திடுவேன்
கண்மணி உனை காதல் செய்ய!!
No comments:
Post a Comment