Saturday, 27 January 2018

நம்பிக்கை!!

மனக்குறை இல்லாத
மனிதனும் இங்கு பிறக்கவில்லையே
இல்லாத ஒன்றைத் தேடி
இருப்பதை மறப்பது நியாயமில்லையே

மண்ணைப் பிளந்து,
புயலைக் கடந்து,
காரணம் தெரிந்தா
முளைக்குது செடி, கொடி?!
எல்லாம் கடந்து,
மரமாய் வளர்ந்து,
காய் கனி தந்து,
வாழும் காரணம் விளங்குதடி!!

உச்சியைப் பிளந்து
மூளை வீங்கி வளரட்டும்
நான்கு சிறகு முளைத்து
திக்கெட்டும் மனம் பறக்கட்டும்
கண்கள் இரட்டிப்பாகி
நாற்புறமும் காணட்டும்
தேனில் தோய்த்தது போல்
நாவின் சொற்கள் இனிக்கட்டும்

வாரணங்கள் கூடி
மார்மீது நிற்பது போல்
காலங்கள் பிசகி
நெஞ்சினை நசுக்கிடினும்
கோலத்தின் சிக்களைப் போல்
சூழ்நிலைகள் ஒன்றிணைந்து
கண்கொள்ளா ஓவியமாய்
வாழ்வும் ஓர் நாள் வளம் பெறும்!!

No comments:

Post a Comment