Saturday, 27 January 2018

மழை மகளே!!

எரிதழல் தீண்டாமல்
நான் சாம்பலாகிப் போனேனே
விழிவீசிய தூண்டிலில்
நான் கயலென நெளிந்தேனே
கொடி மலரே உன்னால்
நான் மதி தொலைத்து நின்றேனே
என் விதி சமைப்பவளே
உன் முன் மண்டியிட்டு தொழுதேனே

கரையோரம் கட்டிவைத்த
அழகான மணல் வீட்டை
கடலலைகள் திரண்டுவந்து
கவ்விக்கொண்டு செல்வது போல்
சிறிது சிறிதாய் நெஞ்சுக்குள்ளே
சேர்த்துவைத்த என் நேசத்தை
சூறாவளி போல் என்னுள் நுழைந்து
சூறையாடிச் சென்றுவிட்டாய்!

இதழ் பிரித்து நீயும்
ஓர் வார்த்தை சொல்வாயோ?!
கண்ணசைவால் என்னை
கலங்கவைத்துக் கொள்வாயோ?!
மனதினுள் நீயும்
மீட்டும் நாதம் என் பெயரோ!!
மழை மகளே என்மேல்
நீர்தூவி செல்வாயோ!!

No comments:

Post a Comment