Monday, 14 November 2016

கவிதைத் தொகுப்பு

அது என்ன விழியா?
இல்லை ஆலகால விஷமா?
நீ பார்த்த நொடியிலே,
என் உயிர் பிறிந்ததடி!!

---------------------------------------------

நான் ஒரு ஆண் நிலா.
யுகங்கள் பலவாயினும்,
பூமியை மட்டுமே சுற்றும் நிலா!
ஜென்மங்கள் பலவாயினும்,
உன்னை மட்டுமே பற்றுவேன் நான்!!

---------------------------------------------

பாலைவன வாழ்வினிலே,
சோலைக்குயிலாய் நீ வந்தாய்!
உன்குரலின் ரீங்காரம் பருகி,
உயிர்காத்து வாழ்கின்றேன்!

---------------------------------------------

பூக்களை ஏனடி சூடினாய்?
தாழ்மை உணர்வினில்,
தலை கவிழ்ந்து துவண்டனவே!!

---------------------------------------------

குலத்திலே மீன்களின் ஆரவாரம்!
இரு தோழியரைக்கண்ட பேரானந்தம்!! 
பாவம் அவை அறிந்திடவில்லை,
அவ்விரண்டும் உன் கண்கள் என்று!!

---------------------------------------------

என் தோட்டத்தில்,
கொத்துக்கொத்தாய் மாதுளைகள்,
உன் கன்னத்துச் சிகப்பை,
கடன் கேட்டு தவம் கொண்டன!! 

---------------------------------------------

உன் கோபப்பார்வையின்,
அனல் கீற்றுகள்,
என் இதயத்தை துளை இட்டன. 
சிறு புன்னகையை
வீசி விட்டு போ,
தடயமின்றி துளைகள் மறையும்! 

---------------------------------------------

நான் பிணமாயினும்,
என்னருகே கலங்காதே!
என் கைநீளும், 
உன் கண்களைத் துடைத்திடவே! 

---------------------------------------------

நீ செல்லும் சாலையோரம்,
மருத மரங்கள் நட்டேன்.
உன் கால்கள் நோகாதிருக்க,
மலர்படுக்கை அவை நெய்தனவே!
என் மனத்துயரம் தீர்ந்தனவே!! 

---------------------------------------------

மேகக்கம்பளிக்குள் 
ஒளிந்து விளையாடும் 
வெண்ணிலவு போல,
என் காதல் கனவோடு,
கண்ணாமூச்சி ஆடுகிறாய்!!

---------------------------------------------

"உன் கண்கள் தானே 
அவளைக் கண்டன,
எனக்கெதற்கு 
காதல் நோய் கொண்டு 
ஆயுள் தண்டனை?",
கேட்டது என் இதயம்.

---------------------------------------------

அது என்ன, 
தெருவின் மத்தியில்
ஒரு பூ மேடு?
ஓ! நீ நடந்து வந்த பாதையோ?!

---------------------------------------------

அகண்ட பாலையில்,
ஒற்றைவழிப் பூப்பாதை! 
தொலைவில் ஓர் பனை மரம், 
அதன் மேல் பத்து பச்சைக்கிளிகள்!
இருட்டில் ஆழ்ந்த பள்ளத்தாக்கு,
உள்ளிருந்து கிளம்பிய ஒளிக்கட்டு!
உயிரற்ற நான்,
உயிரோட்டமாய் நீ!!

---------------------------------------------

உன் பொன்னிற அழகைக் கண்டபின்னே, 
நான் காணும் காட்சிகள் யாவும்,
கருப்பு வெள்ளையாய் மாறின! 
உன் தேன்வழியும் குரலைக் கேட்டபின்னே, 
என்னை சுற்றியுள்ள பூமி,
ஒலியில்லா மௌனமாய்ப் போயின! 
உன்னை நேசித்தபின்னே, 
நான் வாழும் நொடிகள் யாவும் 
வானோர் சாம்ராஜ்யம் ஆயின! 

---------------------------------------------

காற்றில் மிதக்கும் சருகைபோல,
வழிமறந்து தொலைகிறேனே!
கைகள் கோர்த்து வழிநடத்த,
நீயும் வரவே தவிக்கிறேனே!
கண்கள் கட்டி, கைகளும் கட்டி,
திசை புரியா அழுகிறேனே!
கண்டதும் உன்னை, மகிழ்ந்தது நெஞ்சம்,
கடவுள் நீ, என் காதல் தெய்வம்!

---------------------------------------------

நீ ஒரு முறை தந்த 
முத்தத்தினை  எண்ணியெண்ணி,
ஒரு கோடி முறை சிவக்கின்றன,
எனது கன்னங்கள்!!

------------------------------------------------------------------
 










No comments:

Post a Comment