என் உயிரை உலுக்கும் இடியோ
காற்றணுக்களின் உருவோ
என் நொடிக்கூறுகளின் விதியோ
தீ சூடும் பூவனமோ
உயிரைக் கொன்றிடும் அமுதோ
மனம் மயங்கும் மதுவோ
என் முதல் தொடங்கிடும் முதலோ
இறுதி நொடியின் முடிவோ
சிரிக்கும் இதழின் வளைவோ
தகிக்கும் குருதியின் வெப்பமோ
விரல் நுனியில் அவிழும் மலரோ
விழி வீச்சை முடக்கும் அணையோ
கொடும் நாக ரத்தின இனமோ
திரை மூடிய சூரியன் மகளோ
உனைக் காதல் செய்வதோ வரமோ
என் கோடி ஜென்மத்துத் தவமோ!!
No comments:
Post a Comment