நான் ரசித்த வெண்ணிலா
இரண்டாய்ப் பிளந்ததும் ஏனோ?!
ஜொலிக்கும் தாரகைகள்
தரைமேலே வீழ்ந்ததும் ஏனோ?!
நான் வளர்த்த ரோஜாக்கள்
கருப்பாய்ப் பூப்பதும் ஏனோ?!
நீ தீண்டிய வீணையை
தீயுண்டதும் ஏனோ?!
உன் குரலோசை, காற்றில்
எதிரொலிப்பதும் ஏனோ?!
என் மனம் பருகிய உன் முகம்
கண்கள் தொலைத்ததும் ஏனோ?!
உன் பெயர் சொல்லி அழைத்தால்
உள்ளம் குருதிக் குளமாவது ஏனோ?!
உனைக் களவாடியக் காலனும்
எனை மறந்ததும் ஏனோ?!!
No comments:
Post a Comment