வாழ்க்கை என்பது போர்க்களமே!
நீ சிந்தும் ரத்தத்துளிகள்
அங்கே முளைக்கும் ரோஜாவிற்கு
உரமாகட்டும்!
போர்க்களம் ஓர் நாள்,
ரோஜாவனம் ஆகும்!
அதன் மணம்
காற்றில் கலந்த ரத்தவாடையை முறிக்கட்டும்
அதன் முட்கள்
இறுகிய மனத்தைக் கீற,
மனிதம் கசியட்டும்
அதன் இதழ்கள்
தென்றலோடு தவழ்ந்து
நாற்றோரை வாழ்த்தட்டும்
அதன் சருகுகள்
வனம் படர
எருகாகட்டும்
தூரத்து ஓர் நாளில்
முளைக்கும் வெள்ளி
புவியெங்கும் பூத்த பூவில்
பனியில் புகுந்து சிரிக்கட்டும்
மாறட்டும்,
நந்தவனமாய்
மனிதமனம்!!
No comments:
Post a Comment