Ad Text

Monday, 23 October 2017

நீ பிரிந்து சென்றதால்

என் வீட்டு மல்லிகை
கருப்பாய்ப் பூக்குதடி
மாமரத்துக் குயிலும்
மௌனம் பூண்டதடி
என்னை நீங்கி
என் நிழலும் போனதடி
இரவில் நிலவும்
எனைக்கண்டு கரையுதடி
விண்மீன்கள் ஒவ்வொன்றாய்
தரைமேலே வீழ்ந்ததடி
வண்ணவண்ண வானவில்லில்
சாயமும் மங்குதடி
இயற்கையின் உறுப்புகள்
ஒவ்வொன்றாய் ஒடுங்குதடி
நீ பிரிந்து சென்றதால்
என் உலகே நின்று போனதடி!

No comments:

Post a Comment