Wednesday, 4 October 2017

நிலா

தாரகைகளைத் தழுவ
கைகளும் இல்லை
ஓடி விளையாட
கால்களும் இல்லை
தவழ்ந்து தவழ்ந்து
மிதக்கின்றாய்
இவ்வுலகே உன் உலகமென
வாழ்கின்றாய்

கோடானுகோடி
அகவையாயும்
இன்றும் உயிர்களைக்
கவர்கின்றாய்
மேனியிலே
மாசுபடர்ந்தும்
மனித மனங்களை
ஈர்க்கின்றாய்

உன் முழு வனப்பைப்
பார்க்கையிலே
கடல்கூட பெருமிதத்தில்
பொங்கும்!
நீ வாராமல்
போகையிலே
உலகே துக்கத்தில்
முடங்கும்!

அழகழகாய் வளர்வதிலும் மெதுமெதுவாய்த் தேய்வதிலும்
உன் மோகன ரூபம்
சௌந்தர்யமே!
இதயத்தைச் சுண்டி
இழுத்திடுமே!

நீ மட்டும் இல்லையென்றால்
கவிக்குப் பொருளில்லை
கவிதைக்குக் கருவில்லை
காதலுக்குத் தூதில்லை
கதைகள் புனைய வழியில்லை

ஆதவன் ஒளியை
இரவல் வாங்கி
ஆதிக்கம் செலுத்துவாய்
இரவெல்லாம்!
ஆதிசிவன் தலையில்
பிறையாய் அமர்ந்து
ஞானவொளி அருள்வாய்
உயிர்க்கெல்லாம்!!!

2 comments: